Saturday, July 07, 2012

புதிய சிற்றலை வானொலி

07 ஜூலை 2012 இந்திய நேரம் இரவு 0900 மணி முதல் 1000 மணிவரை சிற்றலை 22 மீட்டர் 12140 அலை எண்களில் மீண்டும் ஒலிக்கத்துவங்கியது ஈழத் தமிழர்களுக்கான வானொலி. கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த ஒலிபரப்பு ஒரு சில காரணங்களால் தடை செய்யப்பட்டது. தடையினைத் தாண்டி மீண்டும் இலங்கை மற்றும் தமிழக நேயர்களுக்காக சனிக்கிழமை முதல் ஒலிக்கத்துவங்கியது என நமது புது தில்லி செய்தியாளர் அலோகேஷ் குப்தா தெரிவித்தார். அந்த ஒலிபரப்பின் ஒலிக்கீற்றினை இந்தத் தொடுப்பினில் கேட்கலாம்.

இதனையே நமது ஜப்பான் நண்பரும் உறுதிப்படுத்தினார். அவர் பதிவினை இந்தத் தொடுப்பினில் கேட்கலாம்.